/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.எப்., கணக்கில் முறைகேடு துப்புரவாளர்கள் போராட்டம்
/
பி.எப்., கணக்கில் முறைகேடு துப்புரவாளர்கள் போராட்டம்
பி.எப்., கணக்கில் முறைகேடு துப்புரவாளர்கள் போராட்டம்
பி.எப்., கணக்கில் முறைகேடு துப்புரவாளர்கள் போராட்டம்
ADDED : மார் 07, 2024 01:55 AM

நாமக்கல்:நாமக்கல் நகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் சேரும் குப்பையை சேகரிக்க, 400க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும், சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம் செய்து, வருங்கால வைப்பு நிதியில் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில், நான்கைந்து மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்ட பணம், துப்புரவு பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த, 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், நேற்று காலை,, 6:30 மணிக்கு, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கமிஷனர் சென்னுகிருஷ்ணன் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது, 'பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர். அதையடுத்து, முற்றுகை போராட்டத்தை கைவிட்ட பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

