ADDED : மார் 05, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல், போதுப்பட்டி சாலை, ஏ.எஸ்.பேட்டையில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, கடந்த, 2ல் மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அன்று மாலை, வேல் எடுத்து வருதல், கும்பம் பாழித்தல் நிகழ்ச்சி நடந்தது. 3 காலை, வேல் வீதி உலா வருதல், மாலை, 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை, விநாயகர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு வாணவேடிக்கை நடந்தது. நேற்று இரவு, 7:00 மணிக்கு கும்பம் கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.