/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பகவதி அம்மன் கோவில் விழா தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம்
/
பகவதி அம்மன் கோவில் விழா தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம்
பகவதி அம்மன் கோவில் விழா தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம்
பகவதி அம்மன் கோவில் விழா தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம்
ADDED : ஏப் 21, 2025 07:38 AM
நாமக்கல்: நாமக்கல்லில் அமைந்துள்ள ஸ்ரீபகவதி அம்மன் கோவில், 27ம் ஆண்டு அக்னி குண்டம் திருவிழா, நேற்று துவங்கியது. அதையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, நேற்று காலை பக்தர்கள் மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின், மாலை, 5:00 மணிக்கு, நாமக்கல் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
இன்று காலை, 8:00 மணிக்கு முனியப்பன் வேல் எடுத்து வருதல், இரவு, 7:00 மணிக்கு திருக்குளத்தில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, ஏப்., 22, 23, 24, 25 தேதிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. 26ல் வடிசோறு மாவிளக்கு நடக்கிறது. 27ல் ரதோற்சவம், திருத்தேர் விழா நடக்கிறது. 28 காலை, 7:00 மணிக்கு அலகு குத்துதல், மாலை, 5:00 மணிக்கு குண்டம் பூ மிதித்தல் ஆகியவை நடக்கிறது. 29ல் மஞ்சள் நீராட்டு விழா ரதோற்சவம், திருத்தேர், சக்தியை திரும்ப எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

