/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லப்பட்டியில் தண்ணீர் தொட்டி கட்ட பூமி பூஜை
/
கொல்லப்பட்டியில் தண்ணீர் தொட்டி கட்ட பூமி பூஜை
ADDED : பிப் 16, 2024 11:34 AM
மல்லசமுத்திரம்: கொல்லப்பட்டியில், தண்ணீர் தொட்டி கட்ட பூமி பூஜை நடந்தது.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட, மாமுண்டி சாலையில் அமைந்துள்ள 9வது வார்டு கொல்லப்பட்டியில் நேற்று, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவில், 52 லட்சத்து, 41 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ராசிபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்காக, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் மதுராசெந்தில் பூமி பூஜை செய்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் திருமலை வரவேற்றார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் கூறுகையில்,'' 29 ஆயிரத்து, 161 பேர் கொண்ட மக்கள் தொகையின் அடிப்படையில் கட்டப்படும் தண்ணீர்தொட்டி அக்டோபருக்குள் சோதனை ஓட்டம் நடத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்,'' என்றார். திருச்செங்கோடு கோட்ட கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பவித்ரா மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.