sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பா.ஜ.,-அ.தி.மு.க., எதிர்ப்பு; நகராட்சி டெண்டர் ரத்து

/

பா.ஜ.,-அ.தி.மு.க., எதிர்ப்பு; நகராட்சி டெண்டர் ரத்து

பா.ஜ.,-அ.தி.மு.க., எதிர்ப்பு; நகராட்சி டெண்டர் ரத்து

பா.ஜ.,-அ.தி.மு.க., எதிர்ப்பு; நகராட்சி டெண்டர் ரத்து


ADDED : டிச 05, 2025 10:21 AM

Google News

ADDED : டிச 05, 2025 10:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: பா.ஜ., - அ.தி.மு.க., எதிர்ப்பையடுத்து, நகராட்சி சார்பில் நேற்று நடக்க இருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 5.75 கோடி ரூபாய் மதிப்பில், 20க்கும் மேற்பட்ட கடைகள், பார்க்கிங் வசதியுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், கடைகளை டெண்டர் விட உள்ளதாக நகராட்சி அறிவித்திருந்தது. பணிகள் முடியாத நிலையில், கடைகளை டெண்டர் விடக்கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கமிஷனர் நிவேதிதாவிடம் இது குறித்து மனு அளித்தனர். பா.ஜ., மத்திய நலத்திட்டப்பிரிவின் மாநில துணை அமைப்பாளர் லோகேந்திரன் உள்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நேரடியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று ஏலம் நடக்க இருந்ததால் பொதுமக்கள், வணிகர்கள் நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்தனர். ஆனால், டெண்டர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. அதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: பணிகள் முழுவதும் முடிவதற்குள் ஏலம் விட்டால், குறைந்த வாடகைக்கு தான் செல்லும். இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us