sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பா.ஜ., மறியல் எதிரொலி; உடனடியாக குடிநீர் இணைப்பு

/

பா.ஜ., மறியல் எதிரொலி; உடனடியாக குடிநீர் இணைப்பு

பா.ஜ., மறியல் எதிரொலி; உடனடியாக குடிநீர் இணைப்பு

பா.ஜ., மறியல் எதிரொலி; உடனடியாக குடிநீர் இணைப்பு


ADDED : மே 03, 2024 07:26 AM

Google News

ADDED : மே 03, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம் : ராசிபுரம் அருகே குடிநீர் கேட்டு, பா.ஜ., சார்பில் சாலை மறியல் நடந்தது. இதையடுத்து நேற்று உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சி, 3 வது வார்டு பனங்காடு பகுதியில் சில வீடுகளுக்கு ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சில வீடுகளுக்கு, பல முறை குடிநீர் இணைப்பு கேட்டும் வழங்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம், பா.ஜ., சார்பில் குடிநீர் இணைப்பு வழங்க கோரி ஆர்.புதுப்பட்டி பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.ராசிபுரம் பி.டி.ஓ., அருளப்பன், நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரபாவதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் மனு கொடுத்த அனைவருக்கும் குடிநீர் இணைப்பு தருவதாக உறுதியளித்தையடுத்து கலைந்து சென்றனர். இந்நிலையில், குடிநீர் இணைப்பு வழங்கும் பணி உடனடியாக நேற்று தொடங்கப்பட்டது. நேற்று மதியத்திற்குள் தனமணி, செல்வமணி ஆகிய இரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us