sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழகத்தில் எந்நேரத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்: மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேட்டி

/

தமிழகத்தில் எந்நேரத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்: மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேட்டி

தமிழகத்தில் எந்நேரத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்: மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேட்டி

தமிழகத்தில் எந்நேரத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்: மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேட்டி


ADDED : பிப் 11, 2024 02:03 PM

Google News

ADDED : பிப் 11, 2024 02:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:''நாட்டிற்கு தேசியமும், ஆன்மிகமும் உகந்தது என்ற உணர்வுக்கு மக்கள் வந்துள்ளதால், தமிழகத்தில் எந்த நேரத்திலும், பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது,'' என, பா.ஜ.,மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார்.பா.ஜ., லோக்சபா தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது.

மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பங்கேற்றார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிகளுக்காக, லோக்சபா மற்றும் சட்டசபை பணிக்குழு உள்பட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடந்துவரும், தி.மு.க., ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வரும் லோக்சபா தேர்தல், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.தமிழகத்தில், மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என, இளைஞர்கள், பெண்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். பா.ஜ.,வின் தேவை மிகுந்த அவசியமானது என்பதை உணர்ந்துள்ளனர். தமிழகத்தில், துறைமுகம் முதல் கன்னியாகுமரி வரை, 39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம்.லோக்சாபா தேர்தலுக்கு பின், சட்டசபை தேர்தல் வராமலேயே, பா.ஜ., தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நிலை வரலாம். அதன் முன்னோட்டமாகத்தான், முன்னாள் நிர்வாகிகள், பா.ஜ.,வுக்கு வந்த வண்ணம் உள்ளனர். நாட்டிற்கு தேசியமும், ஆன்மிகமும் உகந்தது என்ற உணர்வுக்கு தமிழக மக்கள் வந்துள்ளனர். அதனால், தமிழகத்தில் எந்த நேரத்திலும், பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஸ்குமார், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us