sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துாசூர் ஏரியில் தடுப்பு

/

துாசூர் ஏரியில் தடுப்பு

துாசூர் ஏரியில் தடுப்பு

துாசூர் ஏரியில் தடுப்பு


ADDED : நவ 18, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 18, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, நாமக்கல்-துறையூர் ரோட்டில் உள்ள ரெட்டிப்பட்டியில் இருந்து எருமப்பட்டி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், அதிகளவில் விபத்து நடக்கிறது. இதனால், விபத்துகளை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்ய அரசிடம் இருந்து நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டது. இதை தொடர்ந்து முதல் கட்டமாக, 9.2 கிலோ மீட்டர் துாரத்திற்கு, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளைவுகள் இல்லாத சாலை அமைக்கும் பணிக்கான முன்னேற்பாடு பணி, கடந்த, 10 மாதத்திற்கு முன் துவங்கியது. இப்பணியில், தற்போது, 80 சதவீதம் சாலை, பாலங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

இதேபோல், துாசூர் ஏரி அருகே அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் சாலை அகலப்படுத்தப்பட்டு பாலம் கட்டும் பணி முடிந்துள்ள நிலையில், அதிகளவில் விபத்து நடக்கும் பகுதிகளாக கருதப்படும் ஏரியின் வரப்பு பகுதிகளில் விபத்து நடக்காமல் இருக்க தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us