sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொங்கு திருப்பதி கோவில் வழிபாட்டிற்கு திறப்பது எப்போது?

/

கொங்கு திருப்பதி கோவில் வழிபாட்டிற்கு திறப்பது எப்போது?

கொங்கு திருப்பதி கோவில் வழிபாட்டிற்கு திறப்பது எப்போது?

கொங்கு திருப்பதி கோவில் வழிபாட்டிற்கு திறப்பது எப்போது?


ADDED : நவ 18, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 18, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம் தாஜ்நகர் பகுதியில் உள்ள கொங்கு திருப்பதி கோவிலை, வழிபாட்டிற்கு எப்போது திறக்கப்படும் என, பக்தர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியில் கொங்கு திருப்பதி கோவில், 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. திருப்பதியில் உள்ளது போல, இந்த கோவிலில் சுவாமி உள்ளதால், கொங்கு திருப்பதி என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு, நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, புரட்டாசி சனிக்கிழமையில் ஏராளமான மக்கள் தரிசனம் செய்ய வந்து செல்வர். இந்நிலையில், இந்த கோவில் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால், கோவில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். மீட்கப்பட்ட நிலத்தை ஏலம் விட வேண்டும். ஏலம் யாரும் எடுக்காவிட்டால், அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, சென்னை உயர்நீதி மன்றம், இரண்டு ஆண்டுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து, கொங்கு திருப்பதி கோவிலை, ஈரோடு வீட்டு வசதி அதிகாரிகள், இரண்டு ஆண்டுக்கு முன் கையகப்படுத்தினர். அதன்பின், கோவிலின் முன்புறம் தடுப்புகள் வைக்கப்பட்டன. கடந்த, இரண்டு ஆண்டுக்கும் மேலாக இக்கோவில் பூட்டியே கிடக்கிறது. கொங்கு திருப்பதி கோவிலை மீண்டும் வழிபாட்டிற்கு திறக்க வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சியினர், பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த, 4ல், குமாரபாளையம் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின், கொங்கு திருப்பதி கோவிலில், 15 மாலை வாஸ்து பூஜை நடக்கும்; மறுநாள், சுதர்சனம் ஹோமம் நடக்கும். இதையடுத்து சுவாமி தரிசனம் நடக்கும் என, தெரிவித்தனர். ஆனால், தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொங்கு திருப்பதி கோவில் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. தேதி உறுதியானவுடன், கோவில் திறப்பு தேதி அறிவிக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us