ADDED : டிச 26, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாய்க்காலில் சடலம் மீட்பு
குமாரபாளையம், டிச. 26-
வெப்படை சாலை, கல்லங்காட்டுவலசு பஸ் ஸ்டாப் அருகே உள்ள வாய்க்காலில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர், வேமன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த வெற்றி, 50, என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர் சீதாராமன், 38, அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.