sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி

/

ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி

ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி

ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி


ADDED : பிப் 19, 2025 06:54 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே புலவர்பாளையத்தை சேர்ந்தவர் ரகுபதி, 36; கட்டட மேஸ்திரி; இவரது மனைவி கல்பனா, 29; தம்பதியருக்கு பிரனீஸ், 13, மவுனீஸ், 11, என, இரண்டு மகன்கள். இதில் மவுனீஸ், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். ரகுபதி, நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி, நாமக்கல்லில் உள்ள உறவினரின் விசேஷத்திற்கு சென்றுவிட்டார்.

பிரனீஸ், நண்பர்களுடன் வெளியில் விளையாட சென்ற நிலையில், வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி சிறுவன் மவுனீஸ் விளையாடியுள்ளார். அப்போது, சேலை அவரது கழுத்தில் சுற்றி இறுக்கியதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார். வேலை முடிந்த ரகுபதி, மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, பேச்சு மூச்சின்றி ஊஞ்சல் கட்டிய சேலையில் தொங்கியபடி இருந்த மவுனீசை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிறுவன் மவுனீசை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், மவுனீஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us