/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
13ல் நன்னீரில் வளரும் வண்ண மீன்களின் இனப்பெருக்க பயிற்சி
/
13ல் நன்னீரில் வளரும் வண்ண மீன்களின் இனப்பெருக்க பயிற்சி
13ல் நன்னீரில் வளரும் வண்ண மீன்களின் இனப்பெருக்க பயிற்சி
13ல் நன்னீரில் வளரும் வண்ண மீன்களின் இனப்பெருக்க பயிற்சி
ADDED : அக் 08, 2025 01:21 AM
மோகனுார், 'வரும், 13ல், நன்னீரில் வளரும் வண்ண மீன்களின் இனப்பெருக்கம், வளர்ப்பு முறைகள் குறித்து பயிற்சி முகாம் நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 13 காலை, 10:00 மணிக்கு, 'நன்னீரில் வளரும் வண்ண மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு முறைகள் பயிற்சி' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியில், நன்னீரில் வண்ணமீன் வளர்ப்பிற்கேற்ற இடம் தேர்வு செய்தல், வளர்ப்பு முறைகள், வளர்ப்பிற்கான அமைப்புகள், குட்டி மற்றும் முட்டை இனத்தில் இனப்பெருக்கம் செய்யும் முறைகள், நீர் மற்றும் உணவு மேலாண்மை, செயற்கை உணவு தயாரிக்கும் முறைகள், கண்ணாடி தொட்டி தயாரிக்கும் முறைகள், பொருளாதாரம் மற்றும் விற்பனை முறைகள் குறித்து விளக்கப்படும்.
மேலும், மத்திய, மாநில அரசின் மீன் வளர்ப்புக்குள்ள மானியம் பற்றியும் எடுத்துரைக்கப்படும். இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், முதுநிலை கல்லுாரி மாணவ, மாணவியர், ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286-266345, 266650, 73585 94841 ஆகிய தொலைபேசி மற்றும் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.