/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின் இணைப்புக்கு லஞ்சம் மின் ஊழியர்களுக்கு 'காப்பு'
/
மின் இணைப்புக்கு லஞ்சம் மின் ஊழியர்களுக்கு 'காப்பு'
மின் இணைப்புக்கு லஞ்சம் மின் ஊழியர்களுக்கு 'காப்பு'
மின் இணைப்புக்கு லஞ்சம் மின் ஊழியர்களுக்கு 'காப்பு'
ADDED : செப் 20, 2025 10:54 PM

நாமக்கல்:வீட்டு இணைப்புக்கு, 5,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர், கேங்மேன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மொளசியை சேர்ந்தவர் நவநீதம், 36; எலக்ட்ரீஷியன். இவரது தாய் ஜானகிக்கு சொந்தமான, 81 சென்ட் நிலத்தில் வீடு கட்டி உள்ளார்.
அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, எர்ணாபுரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகியபோது, லைன் இன்ஸ்பெக்டர் மாது, 57, கேங்மேன் விவேகானந்தன், 41, ஆகியோர், 5,500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். நவநீதம், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்களின் ஆலோசனைபடி நேற்று மதியம், 12:30 மணிக்கு வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்துார் சாலையில், பணத்தை நவநீதம், விவேகானந்தனிடம் கொடுத்த போது, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், விவேகானந்தனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, மாதுவையும் போலீசார் கைது செய்தனர்.