sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோழி மேய்ந்ததில் தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு

/

கோழி மேய்ந்ததில் தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு

கோழி மேய்ந்ததில் தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு

கோழி மேய்ந்ததில் தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : நவ 05, 2025 01:19 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், பரமத்தி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஜீவேந்திரன், 30; கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீர்த்திகா, 24; ஆசிரியர். இவர், வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர், 43; இவரது மனைவி ரவிதா, 40; நேற்று முன்தினம், கீர்த்திகா வளர்க்கும் கோழிகள், ரவிதா வீட்டு பகுதியில் புகுந்து பூச்செடிகளை சேதப்படுத்தியுள்ளது.

ஆத்திரமடைந்த ரவிதா, கீர்த்திகாவிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், ரவிதா, தன் உறவினர்களுடன் சேர்ந்து கீர்த்திகாவை சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த கீர்த்திகாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரமத்தி போலீசார், ஏழு பேர் மீது வழக்குப்பதிந்து, அதே பகுதியை சேர்ந்த நித்திய செல்வன் மகன் பிரபு, 33, என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான பவிதா, தீபிகா, வசீகரன், சாந்தன், அம்பி, பிரபு ஆகிய ஆறு பேரை தேடி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us