sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நீதிமன்றம் வந்த போலீசாரை தடுத்த வாலிபர் மீது வழக்கு

/

நீதிமன்றம் வந்த போலீசாரை தடுத்த வாலிபர் மீது வழக்கு

நீதிமன்றம் வந்த போலீசாரை தடுத்த வாலிபர் மீது வழக்கு

நீதிமன்றம் வந்த போலீசாரை தடுத்த வாலிபர் மீது வழக்கு


ADDED : செப் 23, 2025 02:03 AM

Google News

ADDED : செப் 23, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் :திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த துரைசாமி மகன் கார்த்திக், 34; இவர் முசிறி போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர், 2024ல் முசிறி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய

போது தனிப்படையில் டிரைவராக இருந்தார். அப்போது, மதுவிலக்கு தொடர்பான வழக்கில், நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி, வ.உ.சி., நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வீரா என்கிற வீரகுமாரனை, 38, கைது செய்தனர். இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு ஒன்றில் சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜராக, நேற்று கார்த்திக் வந்திருந்தார்.

அப்போது அங்கிருந்த வீரா மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு வாலிபர் என, இருவரும் கார்த்திக்கை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திக் கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us