நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் வட்டாரத்தில், மரவள்ளி கிழங்கை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் மரவள்ளி கிழங்கை, செல்லப்பம்பட்டி, ஆத்துார், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள சேகோ பேக்டரிக்கு, ஜவ்வரிசி தயாரிக்க அனுப்புகின்றனர். சேகோ பேக்டரி உரிமையாளர்கள், மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த வாரம், மரவள்ளி கிழங்கு டன், 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் டன்னுக்கு, 1,000 ரூபாய் குறைந்து, 5,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 'சிப்ஸ்' மரவள்ளி, 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

