sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரவள்ளி முத்தரப்பு கூட்டம்

/

மரவள்ளி முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி முத்தரப்பு கூட்டம்


ADDED : ஜன 08, 2025 06:49 AM

Google News

ADDED : ஜன 08, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மரவள்ளி கிழங்கு விவசாயிகள், ஆலை உரிமையாளர்கள், மாவட்ட நிர்வாகம் அடங்கிய முத்தரப்பு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் முன்னிலை வகித்து பேசியதாவது: தமிழகத்தில், ஜவ்வரிசி பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக, முதல்வரின் காலை உணவு திட்டத்தில் ஜவ்வரிசி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மரவள்ளி கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யவும், கூட்டுறவு முறையில் ஜவ்வரிசி ஆலையை தொடங்கவும், மரவள்ளியிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசுக்கு முன்மொழிவு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன முறையில் ஸ்டார்ச் அளவை கண்டறியும் டிஜிட்டல் மீட்டர் தொழில் நுட்பம், ஆராய்ச்சி நிலைய ஒப்புதலுடன் ஆலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேகோ ஆலை நிறுவனங்கள் மூலம் மரவள்ளி மூலப்பொருள்களிலிருந்து எரிபொருள் தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தின் துணை நிலையம், நாமக்கல் மாவட்டத்தில் நிறுவுவதற்கு வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். சேகோ சர்வ் மேலாண் இயக்குனர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் அருளரசு, வேளாண் இணை இயக்குனர் கலைச்செல்வி, விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us