sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

த.வெ.க., கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை

/

த.வெ.க., கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை

த.வெ.க., கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை

த.வெ.க., கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை


ADDED : நவ 05, 2025 01:53 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் விஜய் பங்கேற்ற, த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில், 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த பொது மக்கள், கடை வியாபாரி

கள், தள்ளுவண்டி வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்பட, 306 பேருக்கு சி.பி.ஐ., தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த, 2 முதல் கரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த, 15 போலீசார் விசாரணைக்காக நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகினர். அவர்களிடம், த.வெ.க., பிரசார கூட்டத்தில், பாதுகாப்பு பணிகள் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us