/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தைக்கு தொந்தரவு முதியவருக்கு வலைவீச்சு
/
குழந்தைக்கு தொந்தரவு முதியவருக்கு வலைவீச்சு
ADDED : ஜூன் 10, 2025 05:40 AM
பள்ளிப்பாளையம் : நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தறித்தொழிலாளியின், 4 வயது மகள், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். கடந்த, 6ல் குழந்தை தொடர்ந்து அழுதபடி இருந்துள்ளது. குழந்தையிடம் பெற்றோர் விசாரித்தபோது, அங்கன்வாடி மையத்தில் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
பெற்றோர் புகாரில், போலீசார் விசாரித்ததில், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தேவராஜ், 60, அங்கன்வாடி மைய உதவியாளர், வெப்படையை சேர்ந்த சரஸ்வதி, 49, ஆகியோருக்கு பழக்கம் இருந்துள்ளது. அவரை பார்க்க, அங்கன்வாடி மையத்துக்கு தேவராஜ் அடிக்கடி வந்த போது, குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரஸ்வதியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தேவராஜை தேடி வருகின்றனர்.