/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மதுபான கடையில் மோதல்: 2 பேர் கைது
/
மதுபான கடையில் மோதல்: 2 பேர் கைது
ADDED : நவ 23, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுபான கடையில்
மோதல்: 2 பேர் கைது
புதுச்சத்திரம், நவ. 23-
புதுச்சத்திரம் அருகே, பாலம்பட்டியை சேர்ந்தவர் உமாபதி, 34; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், கூனவேலம்பட்டியில் உள்ள மதுபான கடையில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மது குடிக்க வந்த நிசாத், சதீஸ்குமார், விமல்ராஜ் ஆகியோருக்கும், உமாபதிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த உமாபதி, புதுச்சத்திரம் போலீசில் அளித்த புகார்படி, சதீஸ்குமார், விமல்ராஜை போலீசார் கைது செய்தனர். நிசாத்தை தேடி வருகின்றனர்.