sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

15ல் திட்டப்பணியை தொடங்கி வைத்து நலத்திட்டம் வழங்க முதல்வர் நாமக்கல் வருகை: எம்.பி., தகவல்

/

15ல் திட்டப்பணியை தொடங்கி வைத்து நலத்திட்டம் வழங்க முதல்வர் நாமக்கல் வருகை: எம்.பி., தகவல்

15ல் திட்டப்பணியை தொடங்கி வைத்து நலத்திட்டம் வழங்க முதல்வர் நாமக்கல் வருகை: எம்.பி., தகவல்

15ல் திட்டப்பணியை தொடங்கி வைத்து நலத்திட்டம் வழங்க முதல்வர் நாமக்கல் வருகை: எம்.பி., தகவல்


ADDED : அக் 07, 2024 03:47 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும், 15ல், நாமக்கல் வருகை தந்து, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.

நாமக்கல் - சேலம் சாலை, பொம்மக்குட்டைமேட்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்-ளதையொட்டி, பந்தல் அமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி.,யும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார், அடிக்கல் நாட்டி பந்தல் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து தரப்பு மக்களும் பயன்-பெறும் வகையில், பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்ப-டுத்தி வருகிறார். அதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும், பல்-வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக

சென்று, முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துறை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார்.அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து சிறப்பித்த தமிழக முதல்வர், வரும், 15ல், நேரடியாக வருகை தந்து, பல்வேறு திட்டப்பணிகளை

தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.அதன்படி, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், வருவாய், மாற்-றுத்திறனாளிகள் நலம், வேளாண், வேளாண் பொறியியல், ஆதி திராவிடர் நலன், பிற்படுத்தப்பட்டோர் நலம், தாட்கோ போன்ற பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட

உதவிகளும், பொதுப்ப-ணித்துறை, நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்-சித்துறை போன்ற துறைகள் சார்பில், முடிவற்ற திட்டப்பணி-களை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., சுமன், நெடுஞ்சாலைகள் துறை கோட்டப்பொறி-யாளர் திருகுணா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவக்-குமார், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us