ADDED : ஆக 29, 2025 01:40 AM
ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், வெளி மாவட்ட வியாபாரிகளும் வந்தனர்.
கடந்த வாரம் அதிகபட்சமாக கிலோ, 221.79 ரூபாய், குறைந்தபட்சமாக, 198.99 ரூபாய், சராசரியாக, 219.79 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 16 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
நேற்று நடந்த ஏலத்தில், 8,730 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 223.30 ரூபாய், குறைந்தபட்சமாக, 216.88 ரூபாய், சராசரியாக, 220.59 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 17 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.