/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு விலை உயர்வு
/
தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு விலை உயர்வு
தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு விலை உயர்வு
தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு விலை உயர்வு
ADDED : ஜூன் 27, 2025 01:19 AM
ப.வேலுார், தேசிய வேளாண்மை சந்தையில், கடந்த வாரத்தை விட தேங்காய் பருப்பு விலை உயர்ந்தது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்துக்கு ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், வெளி மாவட்ட வியாபாரிகளும் வந்தனர்.
கடந்த வாரம் தேசிய வேளாண்மை சந்தையில் ஏலத்திற்கு, 15,520 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 235.69 ரூபாய், குறைந்தபட்சமாக, 215.99 ரூபாய், சராசரியாக, 233.05 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 31 லட்சத்து, 86 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
நேற்று நடந்த சந்தையில் ஏலத்திற்கு, 20,090 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 256.19 ரூபாய், குறைந்தபட்சமாக, 245.99 ரூபாய், சராசரியாக, 251.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 48 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம்
நடந்தது.