/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
ADDED : ஆக 13, 2025 07:16 AM
ப.வேலுார்: ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது.
இந்த சந்தைக்கு ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர்.
கடந்த வாரம், அதிகபட்சமாக கிலோ, 64.99 ரூபாய், குறைந்தபட்சம், 50.51 ரூபாய், சராசரி, 63.99 ரூபாய் என, 7 லட்சத்து, 42,000 ரூபாய்க்கு வர்த்தகமானது. நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 66.99 ரூபாய், குறைந்தபட்சம், 45.90 ரூபாய், சராசரி, 56.89 ரூபாய் என, 5 லட்சத்து, 84,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தேங்காய் விலை உயர்ந்து விற்பனையானது.