/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
ADDED : ஆக 27, 2025 01:23 AM
ப.வேலுார், நாமக்கல், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் தேங்காய் வரத்து குறைவால் விலை உயர்ந்தது.
ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய்களை கொண்டுவந்தனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் ஏலம் எடுக்க வந்திருந்தனர். கடந்த வாரம், 32,532 தேங்காய்கள் வரத்தாகின. அதிகபட்சம் கிலோ, 61.76 ரூபாய், குறைந்தபட்சம், 50.45 ரூபாய், சராசரி, 58.81 ரூபாய் என, ஐந்து லட்சத்து, 51,000 ரூபாய்க்கு விற்பனையாகின. நேற்று நடந்த ஏலத்திற்கு, 18,261 தேங்காய்கள் மட்டுமே வரத்தாகின. அதிகபட்ச்ம கிலோ, 66 ரூபாய், குறைந்தபட்சம், 50.59 ரூபாய், சராசரி, 56.59 ரூபாய் என, நான்கு லட்சத்து, 52,000ர ரூபாய்க்கு விற்பனையாகின.