/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சமரச தீர்வு மூலம் இருவருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கல்
/
சமரச தீர்வு மூலம் இருவருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கல்
சமரச தீர்வு மூலம் இருவருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கல்
சமரச தீர்வு மூலம் இருவருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கல்
ADDED : ஜன 03, 2025 01:40 AM
நாமக்கல், ஜன. 3-
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில், வாடிக்கையாளர்களுக்கு, ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன.
ராசிபுரம் அடுத்த
முத்துக்காளிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி கவிதா, 53. இவரது மகன் சைலேஸ்வர், 2023 ஜனவரியில் காரை ஓட்டிச் சென்றபோது, பெருந்துறை அருகே விபத்து ஏற்பட்டு இறந்துள்ளார். காருக்கு பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.
மகன் இறப்பிற்கு பின், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீட்டு தொகையை வழங்க கோரி கவிதா விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார். வேகமாக ஓட்டி சென்று, கார் விபத்துக்கு உள்ளானதால் இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த கவிதா, 2024 நவம்பரில் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தைக்காக வக்கீல் குமரேசனை மத்தியஸ்தராக நியமனம் செய்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் உத்தரவிட்டார். தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் சமரச அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒப்புக்கொள்ளப்பட்ட அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு,ரூ.9.30 லட்சம் வழங்குமாறு நுகர்வோர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
அதேபோல் மற்றொரு வழக்கில், நாமக்கல்-மோகனுார் சாலையில் வசித்து வரும் ராமசாமி மகன் சுப்பிரமணியம் என்பவர், எல்.ஐ.சி., நிறுவனம் மீது தாக்கல்
செய்திருந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தைக்காக, வக்கீல் முரளிகுமாரை மத்தியஸ்தராக நியமனம் செய்யப்பட்டது. சமரச பேச்சுவார்த்தையின் அடிப்படையில், வழக்கு தாக்கல் செய்த சுப்பிரமணியத்துக்கு ரூ.2.83 லட்சம் உடனடியாக பணமாக (டிமாண்ட் டிராப்டாக) வழங்கப்பட்டது.