/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கியதாக புகார்
/
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கியதாக புகார்
ADDED : மே 18, 2025 05:20 AM
ராசிபுரம்: ராசிபுரம், கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி சீதா, 55; இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். சீதா, கடந்த, 1994ம் ஆண்டு கோனேரிப்பட்டியை சேர்ந்த கல்-லுாரி ஆசிரியர் மோகன சுந்தரத்திடம், 2,067 சதுரடி நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். 2015ல் இதற்கு வரு-வாய்த்துறையினரும் கூட்டுப்பட்டா வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், சீதா இறந்த பின், சுப்ரமணி தன்னுடைய பெய-ருக்கு பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பித்துள்ளார். அப்போது தான் அவருடைய நிலத்தில், 1,507 சதுரடி நிலம் ஓடை புறம்-போக்கு நிலத்தில் இருப்பது தெரிந்தது.
இதனால், சுப்ரமணி நிலம் விற்றவர், நிலத்தை கிரயம் செய்த சார்-பதிவாளர் அலுவலகம், பட்டா வழங்கிய வருவாய்த்துறை என, பல இடங்களில் சென்று முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை.
இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட வருவாய்த்துறைக்கு சுப்ர-மணி புகாரளித்துள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் விசாரித்த போது, 'கடந்த, 1994ம் ஆண்டு நடந்த பிரச்னை. எங்கு தவறு நடந்தது என, விசாரித்தால் தான் தெரியும்' என்றனர்.