/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஹெச்.எம்., ஆசிரியர்கள் மீது புகார்: மாணவியர், பெற்றோரிடம் விசாரணை
/
ஹெச்.எம்., ஆசிரியர்கள் மீது புகார்: மாணவியர், பெற்றோரிடம் விசாரணை
ஹெச்.எம்., ஆசிரியர்கள் மீது புகார்: மாணவியர், பெற்றோரிடம் விசாரணை
ஹெச்.எம்., ஆசிரியர்கள் மீது புகார்: மாணவியர், பெற்றோரிடம் விசாரணை
ADDED : செப் 23, 2024 05:32 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு பகுதியில் அரசு நடுநி-லைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வரு-கின்றனர். நேற்று முன்தினம், அப்பகுதியில் நடந்த அரசு விழாவிற்கு வந்த அமைச்சர் மதிவேந்தன்,
கலெக்டர் உமா ஆகி-யோரின் காரை முற்றுகையிட்டு, அலமேடு அரசு பள்ளியில் படிக்கும் மாணவியர் சிலர், தங்களது பெற்றோருடன், தலைமை ஆசிரியர், சில ஆசிரியர்கள் மீது பாலியல் சில்மிஷ புகார் தெரி-வித்தனர்.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, குழந்தைகள் நல பாது-காப்பு அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் வட்டார கல்வி அதிகாரிகள், புகார் தெரிவித்த மாணவியர், பெற்றோரிடம் விசா-ரணை நடத்தினர். இன்று, மாவட்ட அளவில் உள்ள கல்வி அதி-காரிகள், பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்த உள்-ளனர். அதன்பின், புகார் குறித்து உரிய நடவடிக்கை இருக்கும் என, தெரிகிறது.