/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கட்டுமான தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 30, 2025 04:54 AM

நாமக்கல்: தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை கண்-டித்து, மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், நாமக்-கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் குருநா-கலிங்கம், மாவட்ட செயலாளர் கலைவாணன் ஆகியோர் பேசினர்.அதில், மத்திய அரசு கொண்டுவந்த, நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். கட்டு-மான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூ-தியம் மாதம், 3,000 ரூபாய் வழங்க வேண்டும். அக்., நவ., மாதத்திற்கு, உடல் உழைப்பு தொழி-லாளர்களின் ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம் உட்பட நிலுவை தொகையும், கட்டுமான தொழிலாளர்க-ளுக்கு வழங்கக்கூடிய பணப்பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

