sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரி உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த ஆலோசனை கூட்டம்

/

காவிரி உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த ஆலோசனை கூட்டம்

காவிரி உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த ஆலோசனை கூட்டம்

காவிரி உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த ஆலோசனை கூட்டம்


ADDED : ஜூலை 31, 2024 07:16 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: காவிரி உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த, பாசன விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.

கலெக்டர் உமா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''மேட்டூர் அணையில் வெள்ள உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரை, நிலத்தடி நீரை செரிவூட்ட பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கரையோரங்களில் கால்நடைகள் மேய்க்கப்பட்டு வருவதால், தண்ணீரில் அடித்து செல்லாத வகையில் பாதுகாக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.வாய்க்கால்களில் உள்ள அனைத்து மதகுகளும் நல்ல முறையில் செயல்படுவது குறித்து உறுதி செய்ய வேண்டும். ஆடிப்பெருக்கு விழாவில் மக்கள் கூடும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை பதாகைகளையும் அமைக்க வேண்டும்,'' என்றார்.டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குனர் (பொ) கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us