/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடர் மழையால் மஞ்சள் வரத்து சரிவு
/
தொடர் மழையால் மஞ்சள் வரத்து சரிவு
ADDED : ஆக 13, 2025 05:46 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மஞ்சள் மண்டிகள் மூலம், வாரந்-தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. கடந்த வாரம், தொடர் மழை பெய்ததால் மஞ்சளை காயவைத்து, சலித்து விற்பனைக்கு கொண்டு வருவதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால், கடந்த வாரம், 700 மூட்டைகள் விற்பனைக்கு வந்த நிலையில் நேற்று, 423 மூட்டை மஞ்சள் மட்-டுமே விற்பனைக்கு வந்திருந்தது.
நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 11,689 ரூபாய், அதிகபட்சம், 13,999 ரூபாய், உருண்டை ரகம் குறைந்தபட்சம், 8,675 ரூபாய், அதிகபட்சம், 12,369 ரூபாய்; பனங்காலி, 8,402 ரூபாயிலிருந்து, 29,265 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 312, உருண்டை, 100, பனங்-காலி, 11 என, 423 மூட்டை மஞ்சள், 30 லட்சம் ரூபாய்க்கு விற்ப-னையானது. கடந்த வாரம், 57 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் விற்ப-னையானது குறிப்பிடத்தக்கது