/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தையில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
சேந்தையில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : நவ 19, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், தமிழகம் முழுவதும், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல் சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
நேற்று காலை, சற்று மழை பெய்வது நின்றவுடன், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அவர்களின் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், காலை, 11:00 மணி முதல் மீண்டும் மழை பெய்ய
தொடங்கியது.
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளிக்கு சென்ற குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

