ADDED : அக் 14, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு அருகே, மாங்குட்டைபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 50. இவர், மல்லசமுத்திரம் அருகேயுள்ள, கருமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் கிரானைட் நிறுவனத்தில் சமையலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கிரானைட் நிறுவனத்தை பார்வையிட சென்றபோது பாம்பு கடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.