sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரும் 8ல் கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் முகாம்

/

வரும் 8ல் கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் முகாம்

வரும் 8ல் கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் முகாம்

வரும் 8ல் கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் முகாம்


ADDED : நவ 06, 2024 01:31 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரும் 8ல் கூட்டுறவு சங்க

பணியாளர் குறைதீர் முகாம்

நாமக்கல், நவ. 6-

'நாமக்கல்லில், வரும், 8ல் கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது' என, மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் உத்தரவுப்படி, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளை கேட்டு தீர்வு செய்யும் வகையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவுரைப்

படி, 2 மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டாவது வெள்ளிக்கிழமை, மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும், பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 3வது பணியாளர் நாள் நிகழ்ச்சி, வரும், 8ல் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், இரண்டாவது தளத்தில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில், காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து நிலை பணியாளர்களும், தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின், பணியாளர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us