/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட் கடைகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பு
/
மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட் கடைகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பு
மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட் கடைகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பு
மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட் கடைகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பு
ADDED : அக் 06, 2024 03:18 AM
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளை, போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.
நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லை. மேலும், நகரின் மையத்தில் அமைந்துள்-ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, நாமக்கல் நகருக்கு புதிய ரிங் ரோடு அமைய உள்ள, முதலைப்பட்டி அருகே புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்-ளது. பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் திறந்து பயன்-பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.இங்கு, 50 பஸ்கள் நிறுத்துவதற்கான இட வசதியுடன், இரு ஓட்டல்கள் உள்ளிட்ட 57 கடைகள், பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்-டுள்ளது. கடைகளை மாத வாடகைக்கு விடுவதற்கான ஏலத்தை, வெளிப்படையாக நடத்த வேண்டும் என, வணிகர் சங்கம் உள்-ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதை தொடர்ந்து, கடைகள் ஏலத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்-டது.
கடை ஏலம் எடுப்பவர்கள், 4 லட்சம் ரூபாய் டிபாசிட் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதைய-டுத்து, 100க்கும் மேற்பட்டவர்கள் டிபாசிட் செலுத்தி, ஏலத்திற்-காக விண்ணப்பம் செய்திருந்தனர். நேற்று முன்தினம் மாநக-ராட்சி அலுவலகத்தில், கமிஷனர் மகேஸ்வரி முன்னிலையில், நேரடி பொது ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விண்ணப்பம் செய்த-வர்கள் கலந்துகொண்டு, போட்டி போட்டு கடைகளை ஏலம் எடுத்தனர். ஒரு கடை குறைந்த பட்சம், 16 ஆயிரம் ரூபாய், அதி-கபட்சம், 42 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
ஏலத்தொகை அதிகம் நிர்ணயம் செய்யப்பட்டதால், 33 கடைகள் மட்டுமே ஏலம் விடப்பட்டது. மீதம் உள்ள, 24 கடைகள் விரைவில் ஏலம் விடப்பட்டும் என, மாநகராட்சி நிர்-வாகம் அறிவித்துள்ளது.