/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அசல் ஆவணங்களை திருப்பித்தராத வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
/
அசல் ஆவணங்களை திருப்பித்தராத வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
அசல் ஆவணங்களை திருப்பித்தராத வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
அசல் ஆவணங்களை திருப்பித்தராத வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : நவ 13, 2024 03:38 AM
நாமக்கல்:'அசல்
ஆவணங்களை திருப்பி தராத வங்கி, வாடிக்கையாளருக்கு, ஒரு லட்சம்
ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர்
நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம், ஒருவந்துார் அடுத்த
ஆயக்கல்புதுாரை சேர்ந்தவர் நடராஜன், 77. இவரது நிலத்தின் அசல்
ஆவணத்தை அடமானம் வைத்து, 1990ல் இவரது மனைவியும், இவரும் கோவை
சிவானந்தா காலனியில் உள்ள இந்தியன் வங்கியில், 10 லட்சம் ரூபாய் கடன்
பெற்றனர்.
கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், கடன்
வசூல் தீர்ப்பாயத்தில் நடராஜன் மீதும், அவரது மனைவி லட்சுமி மீதும்,
வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து, வங்கிக்கும்,
வாடிக்கையாளருக்கும் ஏற்பட்ட சமரசத்தில், 15 லட்சம் ரூபாயை நடராஜன்
திருப்பி செலுத்தினார். இதையடுத்து, வங்கி சார்பில், 'கடன் நிலுவையில்
இல்லை' என்ற சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், நடராஜன்
சமர்ப்பித்த அசல் ஆவணங்களை, வங்கி நிர்வாகம் திருப்பி வழங்கவில்லை.
இதனால்,
2023 ஆகஸ்டில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், வங்கி மீது
நடராஜன் வழக்கு தொடுத்தார். விசாரணை முடிந்து, நுகர்வோர் நீதிமன்ற
நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் நேற்று
தீர்ப்பளித்தனர்.
அதில், கணக்கு முடிந்த பின், அசல் ஆவணங்களை
வழங்காமல் காலதாமதம் செய்து வருவது வங்கியின் சேவை குறைபாடே. அதனால்,
நான்கு வாரத்துக்குள், வழக்கு தாக்கல் செய்தவருக்கு, அவரது அசல்
ஆவணங்களை திரும்ப வழங்கவும், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக, ஒரு
லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும், நான்கு வாரங்களுக்குள் வழங்க
தவறினால், காலதாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளும், 1,000 ரூபாய் கூடுதல்
இழப்பீட்டு தொகையாக கணக்கிட்டு வழங்க வேண்டும் என, இந்தியன் வங்கிக்கு
உத்தரவிடப்பட்டது.