/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
ADDED : டிச 25, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, நாமக்கல், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி, ராசிபுரம் உள்ளிட்ட பகுதி கிராமங்களில் இருந்து வாரந்தோறும் ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நேற்று கேரளாவிற்கு மாடுகள் வாங்கி செல்ல ஏராளமான வியாபாரிகள் மட்டுச்சந்தையில் குவிந்தனர். இதனால், நேற்று மாடுகள் விற்பனை அதிகரித்து, 2.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.