sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.வேலுாரில் மீண்டும் சுடுகாடு பிரச்னை போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம்

/

ப.வேலுாரில் மீண்டும் சுடுகாடு பிரச்னை போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம்

ப.வேலுாரில் மீண்டும் சுடுகாடு பிரச்னை போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம்

ப.வேலுாரில் மீண்டும் சுடுகாடு பிரச்னை போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம்


ADDED : நவ 22, 2025 02:29 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கரை டவுன் பஞ்.,க்கு உட்பட்ட திட்டமேடு மற்றும் கள்ளிபாளையத்தை சேர்ந்த, இரண்டு கிராமங்களுக்கு இடையே சுடுகாடு தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், திட்டமேடு பகுதியை சேர்ந்த முதியவர் ஏகாம்பரம், கடந்த, 19ல் உயிரிழந்தார். அவரது உடலை தங்களது பகுதியில் உள்ள திட்டமேடு சுடுகாடு வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என, ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., ]]]லெனின், தாசில்தார் கோவிந்தசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதி சடங்கு நடந்தது.

இந்நிலையில், நேற்று மீண்டும் திட்டமேடு பகுதியை சேர்ந்த நடேசன் மனைவி தங்கமணி, 75, இறந்தார். அவரது உடலை தங்கள் பகுதி வழியாக எடுத்து செல்லக்கூடாது என, மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசம் ஏற்படாததால், டி.எஸ்.பி., சங்கீதா, தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் இறுதிச்சடங்கு நடந்தது.

தொடர்ந்து அப்பகுதியில் சுடுகாட்டு பிரச்னையால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us