/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
/
'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 01, 2024 12:17 PM
நாமக்கல்: நாமக்கல் அருகே, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம், வளையப்பட்டியில் நடந்தது.
மோகனுார் தாலுகாவில் உள்ள, வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, ஆண்டாபுரம், அரூர் சுற்றுப்புற பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. மோகனுார் பகுதியில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, 'சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பினர், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வளையப்பட்டி ஆர்.ஐ., அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கொ.ம.தே.க., ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், 'சிப்காட் எதிர்ப்பு இயக்க' ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
'விவசாயம் மற்றும் மக்களை பாதிக்கும் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.