sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.58.26 லட்சம், 45 கிராம் தங்கம்; உண்டியலில் பக்தர்கள் காணிக்கை

/

ரூ.58.26 லட்சம், 45 கிராம் தங்கம்; உண்டியலில் பக்தர்கள் காணிக்கை

ரூ.58.26 லட்சம், 45 கிராம் தங்கம்; உண்டியலில் பக்தர்கள் காணிக்கை

ரூ.58.26 லட்சம், 45 கிராம் தங்கம்; உண்டியலில் பக்தர்கள் காணிக்கை


ADDED : பிப் 14, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 14, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர், அரங்கநாதர் மற்றும் நரசிம்மர் கோவில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய, 51.71 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.

நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் கோவில்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கை பணம், நகைகள் எண்ணப்படுவது வழக்கம். 2024 அக்., 18ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்று கோவில்களில் உள்ள, 12 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அவை, ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் எண்ணும் பணி காலை 10:00 மணிக்கு தொடங்கி இரவு, 8:40 மணி வரை நடந்தது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மேற்பார்வையில், அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வசீராளன், திருச்செங்கோடு தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் காணிக்கை தொகை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 58 லட்சத்து 26 ஆயிரத்து 592 ரூபாய் ரொக்க பணமும், 43 கிராம் தங்கம், 222 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.






      Dinamalar
      Follow us