/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
7ம் ஆண்டாக பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
/
7ம் ஆண்டாக பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
ADDED : ஜன 19, 2025 06:55 AM
நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து பழனிக்கு, 7ம் ஆண்டாக பாதயாத்திரை குழுவினர், நேற்று புறப்பட்டு சென்றனர்.
பழனிக்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத-யாத்திரை செல்வதால், பழனி பாதயாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், பழனியும் ஒன்று. நாமக்கல் கூலிப்பட்டி பழனிமாலை பாதயாத்திரை குழு-வினர்,
ஆண்டுதோறும் பழனிக்கு பாதயாத்திரை சென்று சுவா-மியை வழிபட்டு வருகின்றனர். இந்தாண்டு, 7ம் ஆண்டாக நேற்று, பழனி பாதயாத்திரை புறப்பட்டனர். கூலிப்பட்டி முருகன் கோவிலில் இருந்து, 150 யாத்திரீகர்கள் புறப்பட்டு, 180 கி.மீ., துாரத்தை, நான்கு நாட்களில் சென்று பழனி முருகனை வழிபடுகின்றனர். நாமக்கல், ப.வேலுார், கொடுமுடி, சென்னி-மலை, மூலனுார், தாராபுரம் வழியாக பழனி அடைகின்றனர்.