/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
/
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : டிச 27, 2025 05:31 AM
குமாரபாளையம்: மார்கழி மாத வெள்ளிக்கிழமையான நேற்று, குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
இதேபோல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜாவீதி சவுண்-டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரி-யம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரி-யம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்-பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், தேவாங்கர் மாரியம்மன் கோவில், 24 மனை மாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்-குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரி-யம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.பக்தர்கள் அதிகாலை முதல் வந்து தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

