/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்குவாரி திறக்க கருத்து கேட்பு கூட்டம் இருதரப்பு மோதலால் பாதியில் நிறுத்தம்
/
கல்குவாரி திறக்க கருத்து கேட்பு கூட்டம் இருதரப்பு மோதலால் பாதியில் நிறுத்தம்
கல்குவாரி திறக்க கருத்து கேட்பு கூட்டம் இருதரப்பு மோதலால் பாதியில் நிறுத்தம்
கல்குவாரி திறக்க கருத்து கேட்பு கூட்டம் இருதரப்பு மோதலால் பாதியில் நிறுத்தம்
ADDED : நவ 14, 2024 07:22 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தை சுற்றிலும், 10க்கும் மேற்பட்ட இடங்களில் கல் குவாரிகள் அமைக்கப்பட்டு, மலைப்பகுதியில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கொண்டமநாய்க்கன்பட்டியில், 4 கல்குவாரிகள் திறக்க கருத்து கேட்பு கூட்டம், சேந்தமங்கலத்தில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அப்போது, கலெக்டர் முன், 'கல் குவாரி உரிமையாளர்கள் தரப்பில் குவாரி திறக்க எதிர்ப்பு இல்லை' என, ஆதரவாக பேசிக்கொண்டிருந்-தனர். அப்போது அங்கு வந்த சுற்றுச்சூழல் தன்னார்வலர் முகிலன், கல்குவாரி திறக்கும் இடத்தின் அருகில் குடியிருப்புகள் உள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என
எதிர்ப்பு தெரி-வித்து பேசினார்.அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி, தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து
வாக்குவாதம் நீடித்-ததால், கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.