sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

6 தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம் வினியோகம் 85.78 சதவீதம் நிறைவு

/

6 தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம் வினியோகம் 85.78 சதவீதம் நிறைவு

6 தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம் வினியோகம் 85.78 சதவீதம் நிறைவு

6 தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம் வினியோகம் 85.78 சதவீதம் நிறைவு


ADDED : நவ 12, 2025 01:12 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:

----------இந்திய தேர்தல் ஆணையம், வரும், 2026, ஜன., 1ஐ., தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் சட்டசபை தொகுதியில், 2,35,828 வாக்காளர்கள்; சேந்தமங்கலத்தில், 2,49,377; -நாமக்கல்லில், 2,64,052; -ப.வேலுாரில், 2,22,632; -திருச்செங்கோட்டில், 2,32,828; -குமாரபாளையம் தொகுதியில், 2,61,913 என, ஆறு சட்டசபை தொகுதிகளிலும், மொத்தம், 14 லட்சத்து, 66,660 வாக்காளர்கள் உள்ளனர்.

மேற்படி வாக்காளர்களுக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கும் வகையில், 1,629 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்

நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கும் பணிகள், கடந்த, 4ல் தொடங்கி, வரும், டிச., 4 வரை நடக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு, 85.78 சதவீதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us