/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாய சங்கம் சார்பில் மாவட்டக்குழு கூட்டம்
/
விவசாய சங்கம் சார்பில் மாவட்டக்குழு கூட்டம்
ADDED : செப் 24, 2024 01:27 AM
நாமக்கல்: நாமக்கல்லில், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்டக்-குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவ-குமார் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். மாநில பொதுச்செய-லாளர் மாசிலாமணி, மாநில துணைத்தலைவர் ரகுமையா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், காவிரி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, காவிரி, சரபங்கா, திருமணி முத்தாறு இணைப்பு கால்வாய் திட்-டத்தை நிறைவேற்றி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீரை தேக்கி
விவசாயிகள் பயன்பெற செய்ய வேண்டும்.நாமக்கல் மாநகராட்சி கழிவுநீர், நேரடியாக துாசூர் ஏரியில் கலப்-பதால் சுற்றுச்சூழல், விவசாய விளைநிலம், நிலத்தடிநீர் கடுமை-யாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த, கழிவுநீர் சுத்தி-கரிப்பு நிலையம் அமைக்க
வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.