/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆசிரியர்கள், பள்ளிகளை காக்க பணி பாதுகாப்புசட்டம் இயற்றணும்: மாவட்ட செயற்குழு தீர்மானம்
/
ஆசிரியர்கள், பள்ளிகளை காக்க பணி பாதுகாப்புசட்டம் இயற்றணும்: மாவட்ட செயற்குழு தீர்மானம்
ஆசிரியர்கள், பள்ளிகளை காக்க பணி பாதுகாப்புசட்டம் இயற்றணும்: மாவட்ட செயற்குழு தீர்மானம்
ஆசிரியர்கள், பள்ளிகளை காக்க பணி பாதுகாப்புசட்டம் இயற்றணும்: மாவட்ட செயற்குழு தீர்மானம்
ADDED : டிச 15, 2024 01:22 AM
நாமக்கல், டிச. 15-
'பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகளை பாதுகாக்கும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்' என, மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடத்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் தேவகி, மகளிரணி அமைப்பாளர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் முருக செல்வராசன், கோரிக்கையை விளக்கி பேசினார்.
கூட்டத்தில், மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம், தமிழகத்தின் இடைநிலை, தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு, 2006 ஜூன், 1 முதல் வழங்க வேண்டும். நிதி மோசடி திட்டமான புதிய ஓய்வூதிய திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்து, தமிழக ஆசிரியர், -அரசு ஊழியருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2003 ஏப்., 1 முதல் தொடர்ந்து வழங்க வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை, ஒப்படைப்பு செய்து விடுப்பூதியம் பெறும் உரிமையை, தமிழக அரசு மீண்டும் வழங் வேண்டும். சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை, பள்ளி ஆசிரியருக்கு தொடர்ந்து தமிழக அரசு வழங்க வேண்டும்.
தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு, மாநில பணிமூப்பு முறையை திணிக்கும் அரசாணையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி பணிமூப்பு முறையை தொடர்ந்திட வேண்டும். பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடங்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி இன்றி பணிமூப்பின் படி பதவி உயர்வு வழங்க வேண்டும். உயிர்காக்கும் மருத்துவர் மற்றும் மருத்துவமனைகளுக்கு மருத்துவர் பாதுகாப்பு சட்டம் இருப்பதுபோல், பள்ளி ஆசிரியர்களை, பள்ளிகளை பாதுகாக்கும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், மைய அலுவலர் பணிகளில் இருந்து பள்ளி ஆசிரியர்களை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.