/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வட்டார அளவில் வானவில் மன்ற போட்டி
/
வட்டார அளவில் வானவில் மன்ற போட்டி
ADDED : நவ 10, 2024 01:29 AM
வட்டார அளவில்
வானவில் மன்ற போட்டி
மல்லசமுத்திரம், நவ. 10-
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், வானவில் மன்ற போட்டிகளில் பள்ளி அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, வட்டார அளவிலான போட்டி, மல்லசமுத்திரம் வட்டார வளமையத்தில், நேற்று நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் சுரேஷ், ஆசிரியர் பயிற்றுநர் சத்தியசிவா முன்னிலை வகித்தனர். மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ஜோதி, சுமதி, அருளாளன் நடுவர்களாகவும், 14 பள்ளிகளை சேர்ந்த, 37 குழுக்களின் மாணவ தலைவர்களும், பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் தயாரித்த ஆய்வு கட்டுரைகளையும், மாதிரிகளையும் சமர்ப்பித்தனர். வட்டார அளவில், மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். வானவில் மன்ற கருத்தாளர் லோகேஸ்வரன் ஒருங்கிணைப்பு செய்துள்ளார்.