sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இனிப்பு, கார வகைகளுக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்த கூடாது: கலெக்டர்

/

இனிப்பு, கார வகைகளுக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்த கூடாது: கலெக்டர்

இனிப்பு, கார வகைகளுக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்த கூடாது: கலெக்டர்

இனிப்பு, கார வகைகளுக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்த கூடாது: கலெக்டர்


ADDED : அக் 09, 2024 01:04 AM

Google News

ADDED : அக் 09, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இனிப்பு, கார வகைகளுக்கு தடை செய்யப்பட்ட

நெகிழி பைகளை பயன்படுத்த கூடாது: கலெக்டர்

நாமக்கல், அக். 9-

'பண்டிகை காலத்தில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு, தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தக்கூடாது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள், ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு, உணவு பாதுகாப்பு சட்ட விதிகள்படி, உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும். தரமான நெய், எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கும், விபரச்சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும்.

அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண், லாட் எண், சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருட்களின் விபரம் அவசியம் குறிப்பிட வேண்டும். மேலும், தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பைகளை பயன்படுத்தக்கூடாது. பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து விற்பனையாளர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக்கொள்ள வேண்டும். உணவுப் பொருட்கள் சம்பந்தமாக, 9444042322 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us