ADDED : அக் 23, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மதியத்திற்கு மேல் ராசிபுரம், அணைப்பாளையம், கவுண்டம்பாளையம், ஆண்டகலுார்கேட் உள்ளிட்ட பகுதிகளில் துாறல் மழை பெய்தது.
இதனால் இரவு குளிர்ந்த காற்று வீசியது. மாலையில் பெய்த மழையால் பள்ளி மாணவ, மாணவியர், பணிக்கு சென்று வீடு திரும்பியவர்கள் பாதிக்கப்பட்டனர்.