/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புரட்டாசி விரதம் முடிந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்வு
/
புரட்டாசி விரதம் முடிந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்வு
புரட்டாசி விரதம் முடிந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்வு
புரட்டாசி விரதம் முடிந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்வு
ADDED : அக் 21, 2024 07:27 AM
ப.வேலுார்: ப.வேலுாரில், ஞாயிறுதோறும் சுல்தான்பேட்டையில் நாட்டுக்கோழி வாரச்சந்தை கூடுவது வழக்கம். அதன்படி, நேற்று கூடிய சந்தையில் பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ப.வேலுார் பகுதி முழுவதும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நிறைந்த பகுதியாகும்.
ஞாயிறு விடுமுறை என்பதால், மட்டன், சிக்கன் அதிகளவு விற்பனையாகும். குறிப்பாக, அனைத்து கோழி கடைகளிலும் கூட்டம் அதிகளவு இருக்கும். இதில், நாட்டுக்கோழி விற்பனை முக்கிய இடம் பிடிக்கும். கடந்த வாரம் நாட்டு கோழி கிலோ, 350 ரூபாயக்கு விற்றது. தற்போது கிலோவுக்கு, 150 ரூபாய் கூடுதலாகி, 500 ரூபாய்க்கு விற்றதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

